Wednesday, June 17, 2020






 

மலரொன்று மலர்ந்தது,
என் கதைகேள் என்றது,
என்னவென்றேன்.
நாடிவந்த வண்டுக்கு,
தேன்தர நான் மறந்ததில்லை.
நாளை மடிவேன் என்றறிந்தும்
நான் மலர மறுத்ததில்லை,
புரிந்ததா?
புரியவில்லையென்றேன்,
மனதை மலராக்கு, மலரச்செய்,
உன் மரணத்திலும் அது பேசப்படும்,
இப்போது புரிந்தது.
இனி நானும்................🥀




Thursday, May 14, 2020

யார் , யார் எந்த சித்தர் வழிபாடு செய்ய வேண்டும் …ஒரு குறிப்பு


மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள்.
 இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால் 
எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். 
அவர்கள் அவர்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ 
அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் 
பிரச்சனை தீர வழிபிறக்கும். ஒரு முறையாவது உங்கள் சித்தர் ஜீவ 
சமாதி நேரில் சென்று ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று 
தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் 
மாதாமாதம் உபவாசம் இருந்து வணங்கிவந்தால் பல மாறுதலான வாழ்வு 
தங்களுக்கு அமையும்.
வெகு தொலைவில் சில ஜீவ சமாதிகள் அமைந்துள்ளதால் அங்கு சென்றுவர 
இயலாதவர்கள் வீட்டிலேயே ஒரு வெள்ளை விரிப்பின்மீது அமர்ந்து உங்கள் 
சித்தரின் பெயரை உச்சரித்து முடிந்தால் அவரின் மந்திரங்களைக்கூறி 
தியானம் செய்யுங்கள். நல்லதே நடக்கும்.
மேலும் அறிக :
திதியில் பிறந்தவர்களே அனைவரும் எனவே திதி இல்லாமல் விதி அமையாது.
உங்கள் நட்சத்திர நாளை பார்த்து பூஜிக்க முடியாவிட்டாலும் உங்கள் திதி 
நாளில் பூஜிக்கலாம். அதுவும் முடியாவிட்டால் அமாவாசை பௌர்ணமி திதிகளில் 
வழிபாடு செய்யலாம். சில சித்தர்களின் ஜீவ சமாதி எங்குள்ளது என்று தெரியாம
லேயே இருக்கிறது. சிலர் அங்குள்ளது இங்குள்ளது எனவும் தன் ஊரை வளர 
வைக்க எத்தனித்து இங்குதான் சமாதி உள்ளது. ஓலைச்சுவடி ஆதாரம் 
உள்ளது என ஒரு கதையையும் உருவாக்கிய சம்பவம் நிறைய உள்ளது. 
எது எப்படியோ நம்பிக்கையே தெய்வம். அந்த நம்பிக்கையோடு இருக்கும் 
இடத்தை நாடிச்சென்று வழிபாடு செய்யுங்கள்.
சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக 
அனைவருக்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும் 
பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். கீழே எந்தெந்த நட்சத்திரத்தி
ல் சித்தர்கள் பிறந்தார்கள் அவர்கள் ஜீவ சமாதி எங்குள்ளது. அவர்களுக்
கான மந்திரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்தி வளம் காணுங்கள்.
அசுவினி நட்சத்திர சித்தர் பெயர் காளங்கிநாதர் ஆவார்
இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர்
 ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்குபெயரே மந்திரம். எனவே 
சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ஓம் குருவே 
சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமியே
 சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம். 
மற்ற நட்சத்திரக்காரருக்கும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். 
காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தர் பெயரை சேர்த்துக்
கொள்ளவும்.அடுத்து
பரணி நட்சத்திரம் சித்தர் போகர் ஆவார். இவர் பழனி முருகன் சன்னதியில்
 சமாதி உள்ளது. அடுத்து
கிருத்திகை நட்சத்திரம் ரோமரிஷி சித்தர்ஆவார். இவருக்கு சமாதியும் 
இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரே கைலாயத்திற்கு சென்றுவிட்டார் 
என வரலாறு கூறுகிறது. இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு 
நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.அடுத்து
ரோகிணி நட்சத்திரம் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி 
திருப்பரங்குன்றத்தில் உள்ளது. அடுத்து
மிருகசீரிடம் நட்சத்திரம் சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி 
சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். 
ஊர் திருவரங்கம் ஆகும். சில நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் 
இரண்டு சித்தர் வருவர். அடுத்து
திருவாதிரை நட்சத்திரம் சித்தர் இடைக்காடார் ஜீவ சமாதி 
திருவண்ணாமலை. அடுத்து
புனர்பூச நட்சத்திரம் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைதீஸ்வரன் 
கோவிலில் ஜீவ சமாதி ஆனவர். அடுத்து
பூசம் நட்சத்திரம் கமல முனி சித்தர் ஆவார். இவர் திருவாரூர் என்ற 
ஊரில் ஜீவ சமாதி உள்ளது.அடுத்து
ஆயில்யம் நட்சத்திரம் இதற்கான சித்தர் அகத்தியர். இவர் ஒளிவட்டம் 
குற்றால பொதிகைமலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் 
திருவனந்தபுரம் இங்கு உள்ளது. அடுத்து
மகம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய 
சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது. 
பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும். அடுத்து
பூரம் நட்சத்திரம் இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும்.
 இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார்.
 இவர் பூமாதேவி அம்சமாக உள்ளார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லி
புத்தூர் மட்டுமே.ஏனெனில் இவர் தோன்றிய இடமே அங்குதான். 
அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவர் 
மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது. இவர் ஜீவசமாதி அரபு நாடான 
மெக்காவில் உள்ளது. இவர் ஒளி வந்துபோகும் இடம் அழகர் மலையாகும். 
இவரை வழிபட நம் நாட்டினர் அழகர் மலைக்குத்தான் செல்கிறார்கள்.அடுத்து

உத்திரம் நட்சத்திரம் இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார். 
இவர் ஜீவசமாதி கோயில் திருச்சி உறையூரில் உள்ளது. அடுத்து
அஸ்தம் நட்சத்திரம் சித்தர் கருவூரார் ஆவார். இவர் சமாதி கரூரில் 
உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய 
கோயில் ஆகும். அடுத்து
சித்திரை நட்சத்திரம் இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார்
நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.அடுத்து
சுவாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். சமாதி 
பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது. அடுத்து
விசாகம் நட்சத்திரம் இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை 
சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் 
மாயவரத்திலும் ஜீவசமாதி உள்ளது. அடுத்து
அனுஷம் நட்சத்திரம் சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று 


அழைக்கப்படுபவராவார். இவர் எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.


அடுத்து
கேட்டை நட்சத்திரம் இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார்
இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். 
இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார். அடுத்து
மூலம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி 
ராமேஷ்வரத்தில் உள்ளது. அடுத்து
பூராடம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு 
சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். அழகர்மலை 
மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.அடுத்து
உத்திராடம் நட்சத்திரம் இதற்கான சித்தபிரான் கொங்கணர்
இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும். அடுத்து
திருவோணம் நட்சத்திரம் இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி 
சுவாமிகள் ஆவார். இவர் சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்
தென்னல் என்ற இடத்தில் உள்ளது. அடுத்து
அவிட்டம் நட்சத்திரம் இதற்கான சித்தர் திருமூலர் ஆவார். இவர் 
சிதம்பரத்தில் ஜீவசமாதி உள்ளது. அடுத்து
சதயம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார்
இவரின் சமாதி இங்குதான் என வரலாறு தெளிவாக குறிக்கவில்லை. 
எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் 
எனக் குறிப்பு உள்ளது.அடுத்து
பூராட்டாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார்
இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி 
வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார். தனித்து சமாதி என்று குறிப்பிடும்படியாக
 தெரிவிக்கவில்லை. அடுத்து
உத்திரட்டாதி நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் 
சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டதென 
வரலாறு கூறுகிறது. இவரை சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் 
ஏழாம் ஓசையில் ஒலியாக வந்து இறைவனுக்கு இசை முழக்கத்தால் 
சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறுமணி 
ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம். அடுத்து
ரேவதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் 
ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது, அறிக.
மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத்
தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒரு
நிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். நிச்சயம் அவர்கள் 
அருளை தர தவறமாட்டார்கள். உங்களிடம் உள்ள பாவ கர்மாவிற்கு தயங்கி 
தெய்வம் துணைக்கு எளிதில் வரமாட்டார்கள். ஆனால் சித்தர்கள்
 அவ்வாறில்லை. தன்னை அழைத்தவர்களுக்கு எதாவது ஒரு வழியில் 
வழிகாட்ட தயங்கமாட்டார்கள். எனவே ஒரு தினத்தில் சில நிமிடங்களை 
யாவது சித்தர் வழிபாட்டிற்கு செலவிடுங்கள்.

சித்தர் பூஜை செய்பவர்கள் நீத்தாருக்கு திதி பார்த்து தெவசம் செய்ய 
வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தது சித்த தியானத்திற்கு அரைமணி 
நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும். இந்த வழிமுறையை 
கடைபிடித்து உங்கள் கஷ்டத்தையும், வறுமையையும் போக்கிக் கொள்ளுங்கள்
http://osbtv.in/newsdetail.php?id=704


Wednesday, August 10, 2016

திருமணத்தில் தாலி நுழைந்த கதை

திருமணமுறை பற்றி....

தாலி கட்டும் வழக்கம் பற்றி சில இணையங்களில் பிழையாக கிடைத்த தகவல்களை பதிவிட்டிருந்தமையை அண்மையில் காணக்கூடியதாய் இருந்தது.
சங்ககாலத்தில் தாலி கட்டும் கிரியை முறை திருமணம் இல்லை. சங்கமருவியகாலத்தில் சங்கக் காதல் சந்தேகக்காதல் ஆனது.
“பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்” சங்கமறுவியகாலத்தில் …. கரணம் என்றால் “கிரியை” -முறையில் திருமணம்.
ஏன் சங்கமருவியகாலத்தில் திருமணம் கிரியை முறையில் மக்கள் மத்தில் சாட்சி வைத்து செய்ய வேண்டி நேர்ந்தது?... சங்க காலத்தின் இறுதியில் அந்த தூய காதல் அசுத்தப்பட்டமையே காரணம்.
“நானும் அவனும் புணர்ந்த காலை குறுக்கு பார்த்திருந்த தான் பொய்ப்பின் நான் எது செய்வேன் யாருமில்லை தானே கள்வன்” இது ஒரு அபலைப்பெண்ணின் குரல்.
இந்த அடிகள் கர்ப்பமாக்கப்பட பெண்ணை, உறவின் பின்னர் பெண்ணை கைகழுவி விடும் போக்கு அதிகரித்தமையை காட்டுகிறது. ஆகவே கிரியை முறை திருமணம் தேவைப்பட் டது .

தாலி பற்றி.....

தாலி என்ற சொல் தாலிகம் என்ற சொல்லின் அடியாக பிறந்தது. தாலிகம் என்றால் பனை மரம் என்று பொருள் படும்.
அதாவது பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் காட்டுவார்கள். தாலி பொருளாகுபெயராகத்தான் இங்கே பயன்படுத்தப்படுகிறது.
பின்னைய காலங்களில் மனித சிந்தனை நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை இன்றைய பவுனாக அதாவது தங்கமாக மாறியுள்ளது.
தமிழனின் பண்பாடு கலாசாரம் போன்றவற்றை விபரிக்கும் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் கருத்து அதில் ஒரு நெகிழ்ச்சித்தன்மை உண்டு.
ஆக மொத்தத்தில் சங்கமருவிய காலமான கி.பி.3ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி.6ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியிலேயே திருமண கிரியை முறைகள் நடைமுறையில் இருந்தன என அறியக்கிடக்கின்றது.


Tuesday, July 19, 2016

கேட்பதும்  கொடுப்பதும்

இறைவன்
மனிதனிடம் கேட்பது,
உள்ளத்தே ஊற்றெடுக்கும்
உண்மையான அன்பை.

மனிதன்
இறைவனுக்குக் கொடுப்பது
உள்ளத் தெளிவில்லாத
உயரிய காணிக்கைகள்.

மனிதன்
இறைவனிடம் கேட்பது
என்றுமே குறையாத
ஏராளமான செல்வங்கள்.

இறைவன்
மனிதனுக்குக் கொடுப்பதோ
என்ன? என்ன? என்ன?


                                            ருத்ரா

Friday, July 15, 2016




குறட்டை

“என்னில் உன்னைப்பார்த்து
சிலருக்குச் சிரிப்பு
பலருக்கு முகம் சுழிப்பு
எதற்காக?

நீ என் நித்திரையின் சிரிப்பொலி
என் நிம்மதியின் எக்காளம்..”

                ருத்ரா
காதலில் தோற்ற மனம்.

தனிமையில் அழுது நிற்கும்.
தற்கொலைக்கும் துணிந்துவிடும்.
உயிராய் நினைத்த காதல்
உதவாதென்றே சொல்லும்.

துன்பத்தால் துவண்டு நிற்கும்.
இன்பத்தை வெறுத் தொதுக்கும்
எத்தகைய உலகமென்றே
தத்துவங்கள் பேசிக் கொள்ளும்.

முகத்தில் முடிவளர்க்கும்.
முடிந்ததையே எண்ணியேங்கும்.
அகத்தில் தன் துயரம் போக்க
அனுதினமும் மதுவை யருந்தும்.

தன்னழகைக் கலைத்து நிற்கும்.
தனக்குள்ளே வெதும்பி நிற்கும்.
காதலின் தோல்வியிங்கு
தனக்கென்றே நினைத்து வாடும்.

மௌனத்தால் தனை வாட்டும்.
கவனத்தைத் திசைதிருப்பும்.
மனத்தினிடை வளர்த்த காதல்
மதி கெட்ட தென்றே தேறும்.

ருத்ரா


காதல் மனம்

தனியே சிரித்திருக்கும்.
தனிமையில் நிலைத்திருக்கும்.
காணுமிடமெல்லாம் தன்
காதலையே பார்த்திருக்கும்.

ஊனுள் உருகிநிற்கும்.
உள்ளத்தை மறைத்து வைக்கும்.
தாம் மட்டுந்தானென்றே
தம்மையே புகழ்ந்து நிற்கும்.

காலத்தால் அழியாது என்றும்
காவியத்தி உள்ளோமென்றும்
போதை தலைக்கேறினாற் போல்
பொய்களும் உரைத்து நிற்கும்.

அன்னைக்கு அடங்கேனென்றும்
தந்தை சொற் கேட்கேனென்றும்
இன்பம் காதல் ஒன்றே என்று
எப்போதும் இறுமாந்திருக்கும்.

ருத்ரா




Wednesday, July 13, 2016

ஆங்கில அகராதியில் தமிழ் வார்த்தைகள்

Coromandel (Cholamandalam)
pariah (paraiyan)
mulligatawny (milakku thanni)
conjee (conjee)
catamaran (kattumaram)
rice (arisi)
ginger (inji)
coir (kayiru)
teak (therkku)
anicut (annaikkattu)
sandal (santhanam)
curry (curry)
mammoty (munveti)
coolie  (coolie)
culvert (kalvettu)
mango (maankaai)
anaconda (aanaikondaan)
cash (kaasu)
candy (cundy)
dhoney (thoney)
pala (palai)
sangam (sangam)
miridangam (miruthangam)
payasam (paayaasam)
bandy (vundi)
cawney (kaani)
cheroot (suruttu)
chuckler (sakkili)
chunam (chunnnambu)
illupi (illupai)
kangany (kangany)
kavadi (kavadi)
machila (manchil- palanquin)
patchouli ( putchilai)
pongal (pongal)
punatoo (punaatu)
மனம்

இயலாமைகளை  ஈட்டித்  தரும்
என்  கனாக் காணும்  கண்.