Friday, July 15, 2016

காதலில் தோற்ற மனம்.

தனிமையில் அழுது நிற்கும்.
தற்கொலைக்கும் துணிந்துவிடும்.
உயிராய் நினைத்த காதல்
உதவாதென்றே சொல்லும்.

துன்பத்தால் துவண்டு நிற்கும்.
இன்பத்தை வெறுத் தொதுக்கும்
எத்தகைய உலகமென்றே
தத்துவங்கள் பேசிக் கொள்ளும்.

முகத்தில் முடிவளர்க்கும்.
முடிந்ததையே எண்ணியேங்கும்.
அகத்தில் தன் துயரம் போக்க
அனுதினமும் மதுவை யருந்தும்.

தன்னழகைக் கலைத்து நிற்கும்.
தனக்குள்ளே வெதும்பி நிற்கும்.
காதலின் தோல்வியிங்கு
தனக்கென்றே நினைத்து வாடும்.

மௌனத்தால் தனை வாட்டும்.
கவனத்தைத் திசைதிருப்பும்.
மனத்தினிடை வளர்த்த காதல்
மதி கெட்ட தென்றே தேறும்.

ருத்ரா


No comments:

Post a Comment